Thursday, February 28, 2008

புத்தபிரான் சொன்னது

உங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதற்காகவோ, இதுதான் மரபு என்பதற்காகவோ அல்லது நீங்கள் கற்பனை செய்து வைத்தது இதுவே என்பதற்காகவோ மட்டும் எதையும் நம்பி விட வேண்டாம். ஆசானை மதிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சொன்னவற்றை எல்லாம் நம்பி விட வேண்டாம். ஆயின் போதுமான பரிசீலனைக்கும் பகுத்தாய்வுக்கும் பிறகு எது நல்லது, பயனுள்ளது, அனைவருக்கும் எது நன்மை தருவது என்று தோன்றுகிறதோ, அந்தச் சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்து நம்புங்கள். அதனையே விடாப்பிடியாகப் பின்பற்றுங்கள். அதனையே உங்கள் வழிகாட்டி ஆக்குங்கள்.